For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இலங்கையில் 2 விடுதலைப் புலிகள் சுட்டுக் கொலை

By Staff
Google Oneindia Tamil News

கொழும்பு:

இலங்கையில் அடையாளம் தெரியாத சிலர் நடத்திய திடீர் தாக்குதலில் விடுதலைப் புலிகள் இயக்கத்தை சேர்ந்த 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

புதன் கிழமை காலை 7.30 மணியளவில் அம்பாரை மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்தது. இங்குள்ள திருக்கோவில் என்றபகுதியில் மோட்டார் பைக்கில் சென்று கொண்டிருந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தை சேர்ந்த ரமேஷ் என்ற வெள்ளையன்(வயது 32), சுஜி வேந்தன் (வயது 19) ஆகியோர் மீது

வேனில் வந்த 2 பேர் திடீரென துப்பாக்கியால் சரமாரியாக சுட்டு விட்டு தப்பி ஓடிவிட்டனர்.

இதில் ரமேஷும், சுஜியும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். வேனில் வந்தவர்கள் போலீஸ் உடை அணிந்திருந்ததாகஅப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து திருக்கோவில் பகுதியில் உடனடியாக கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. இதனால்அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X