மும்பையில் விஷக்காய்ச்சல்: 26 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
மும்பை:
மும்பிையில் வேகமாகப் பரவி வரும் விஷக்காய்ச்சலுக்கு இதுவரை 26 பேர் பலியாகி விட்டனர். மேலும் 250க்கும்மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலிஎண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
மகராஷ்டிர மாநிலத்தில் கடந்த மாதம் பெய்த வரலாறு காணாத மழைக்கு 1200க்கும் மேற்பட்டோர் பலியாகி விட்டனர்.மும்பையில் மட்டும் 700க்கும் அதிகமானோர் பலியானார்கள்.பல இடங்களில் இன்னும் வெள்ள நீர் வடியவில்லை. பல சேரிப்பகுதிகள் இன்னும் வெள்ளத்தில் மூழ்கிக் கிடக்கின்றன.வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களின் உடல்கள் உடனுக்குடன் அப்புறப்படுத்தாததால் மும்பையில் தொற்று நோய் வேகமாகபரவி வருகிறது.
இங்கு கடந்த சில தினங்களாக பரவி வரும் விஷக்காய்ச்சலுக்கு இதுவரை 26 பேர் பலியாகி விட்டனர். மேலும் 250க்கும்மேற்பட்டோர் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.












Click it and Unblock the Notifications