கஞ்சா: மதுரை நீதிமன்றத்தில் செரீனா ஆஜர்
மதுரை:
கஞ்சா வைத்திருந்ததாக தொடரப்பட்டுள்ள வழக்கில் மதுரை போதைப் பொருள் நீதிமன்றத்தில் செரீனா, அவரது தாயார்ஷெரீஜா ஆகியோர் இன்று ஆஜரானார்கள்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு செரீனா, அவரது தாயார் ஷெரீஜா மற்றும் கார் டிரைவர் சதீஷ் ஆகியோரை கருப்பாயூரணிபோலீஸார் கைது செய்தனர். அவர்களது காரில் கஞ்சா இருந்ததாக கூறி அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 3 பேரும் பின்னர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர். இந் நிலையில் இவ்வழக்கைவிசாரித்து வந்த நீதிபதி இடமாற்றம் செய்யப்பட்டதால் விசாரணை பாதிக்கப்பட்டது. வேறு நீதிமன்றத்திற்கு வழக்கை மாற்றஅரசுத் தரப்பில் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
இதைத் தொடர்ந்து மதுரை செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்த செரீனா, வழக்கை வேறு நீதிமன்றத்தில்விசாரிக்கக் கூடாது. புதிய நீதிபதி நியமிக்கப்படும் வரை வழக்கு விசாரணைக்குத் தடை விதிக்க வேண்டும் என்று கோரினார்.
அதன்படி மதுரை நீதிமன்றம் வழக்கு விசாரணைக்கு தடை விதித்தது. இந் நிலையில் போதைப்பொருள் நீதிமன்றத்திற்குமாணிக்கம் என்பவர் புதிய நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும், எனவே வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்டஇடைக்காலத் தடையை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரி போலீஸார் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மனு செய்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி சிங்காரவேலு, விசாரணைக்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை நீக்கி புதன்கிழமைஉத்தரவிட்டார். இதையடுத்து இன்று செரீனா உள்ளிட்டோர் போதைப்பொருள் நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராகினர்.பின்னர் வழக்கை வருகிற 18ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications