சேது: தூர் வாறும் கப்பல்களை முற்றுகையிட மீனவர்கள் முடிவு
ராமநாதபுரம்:
சேது சமுத்திரத் திட்டத்தை எதிர்த்து வரும் மீனவர்கள், நாகை மாவட்டம் கோடியக்கரை பகுதியில் தூர் வாரும் கப்பல்களைமுற்றுகையிட்டுப் போராட்டம் நடத்த தங்களது படகுகளில் கோடியக்கரைக்குப் புறப்பட்டுள்ளனர்.
சேது சமுத்திரத் திட்டத்திற்கு ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகப்பட்டனம், தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களைச்சேர்ந்த பெரும்பாலான மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.இதற்கிடையே சேது சமுத்திரத் திட்டம் தொடங்கப்பட்டு நாகை மாவட்டம் கோடியக்கரை பகுதியில் கடலில் தூர் வாரும் பணிகள்முழு வீச்சில் நடந்து வருகின்றன. இந் நிலையில் தூர் வாரும் பணியில் ஈடுபட்டுள்ள கப்பல்களை முற்றுகையிட்டுப்போராட்டம் நடத்த மீனவர்கள் முடிவு செய்துள்ளனர்.
இதற்காக மேற்கண்ட மாவட்டங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மீனவர்கள் படகுகளில் கிளம்பியுள்ளனர். நாளை இவர்கள்கோடியக்கரையில் தூர் வாரும் பணியில் ஈடுபட்டுள்ள கப்பல்களை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்யவுள்ளனர்.
சேது சமுத்திரத் திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும், இத்திட்டத்தால் மீனவர்களின் வாழ்வாதாரம் பெரிதும்பாதிக்கப்படும் என மீனவர்கள் மத்திய அரசுக்கு மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications