ஆல்பம் இயக்குனர் மீது பாடகர் தேவன் புகார்
சென்னை:
இசை ஆல்பம் தயாரிப்பதாக கூறி ரூ. 1லட்சம் பணத்தை மோசடி செய்து விட்டதாக இயக்குனர் சத்தியன் என்பவர் மீது பிரபலபின்னணிப் பாடகர் தேவன் போலீஸில் புகார் செய்துள்ளார்.
தமிழ் சினிமாவில் 200க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளவர் தேவன். சென்னை மாநகர காவல்துறை ஆணையர்நடராஜை சந்தித்து தேவன் ஒரு புகார் கொடுத்தார்.அதில், சத்தியன் என்பவர், முதல் இதழ் என்ற பெயரில் இசை ஆல்பம் ஒன்றை இயக்கப் போவதாகவும், அதற்கு நான்இசையமைத்துக் கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் காண்டார். இதற்கு நான் ஒத்துக் கொண்டேன்.
இந் நிலையில் ஆல்பம் தயாரிப்புக்காக ரூ. 1லட்சம் தந்து உதவுமாறு சத்தியன் கேட்டுக் கொண்டதால் பணத்தைக் கொடுத்தேன்.பணத்தைப் பெற்றுக் கொண்ட அவர், இதுவரை ஆல்பம் தயாரிக்கும் முயற்சியிலும் ஈடுபடவில்லை, பணத்தையும் திருப்பிக்கொடுக்கவில்லை.
எனவே சத்தியன் மீது நடவடிக்கை எடுத்து, நான் கொடுத்த பணத்தை திருப்பிப் பெற்றுத் தர வேண்டும் என்று தேவன்கோரியிருந்தார். இந்த மனு தொடர்பாக விசாரணை செய்யுமாறு கிண்டி காவல் நிலையத்திற்கு ஆணையர் நடராஜ்உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications