திமுக கூட்டணி தேர்தலுக்கு முன்பாகவே சிதறி விடும்: சி.பி.ஆர்
மதுரை:
சட்டசபைத் தேர்தலுக்கு முன்பாகவே திமுக கூட்டணி சிதறிப் போய் விடும் என்று தமிழக பாஜக தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்கூறியுள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு முன்பாகவே திமுக கூட்டணியில் பிளவுஏற்பட்டு அதில் உள்ள கட்சிகள் சிதறிப் போய் விடும். இது உறுதியாக நடக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.நானாவதி கமிஷன் அறிக்கை தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதி தனது மனம் போன போக்கில் கருத்து தெரிவித்துள்ளார்.அவற்றை ஏற்க முடியாது. தமிழகத்தில் சட்டசபைத் தேர்தலில் பாஜக தனித்துப் போட்டியிடும். அதில் எந்த மாற்றமும் இல்லை.
முல்லைப் பெரியாறு அணையை உயர்த்தும் பிரச்சினையில் கம்யூனிஸ்ட் கட்சிகள் இரட்டை வேடம் போடுகின்றன. இங்குள்ளகம்யூனிஸ்டுகள், அணையின் உயரத்தை அதிகரிக்க வேண்டும் என்று போராட்டம் நடத்துகின்றனர்.
ஆனால் கேரளாவில் உள்ள கம்யூனிஸ்டுகளோ அணையின் உயரத்தைக் கூட்டவே கூடாது என்று திட்டவட்டமாக கூறிவருகின்றனர். 5 மாவட்டங்களின் உயிர் நாடியான இப்பிரச்சினையில் கம்யூனிஸ்டுகள் இரட்டை வேடம் போட்டு மக்களின்வாக்குகளை முறைகேடாகப் பயன்படுத்துகின்றனர்.
மத்திய அரசு உடனடியாக இதில் தலையிட்டு அணையின் உயரத்தை 145 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.வரும் காலத்தில் 154 அடியாக உயர்த்த வேண்டும். முல்லைப் பெரியாறு அணையின் உயரத்தை உயர்த்தக் கோரி வருகிற 23ம்தேதி மதுரையில் இருந்து கம்பத்திற்கு பாஜக சார்பில் பாதயாத்திரை நடத்தப்படும் என்றார் சி.பி.ராதாகிருஷ்ணன்.












Click it and Unblock the Notifications