For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தர்மபுரி பஸ் எரிப்பு: ஒரே நாளில் 5 பேர் சாட்சியம்

By Staff
Google Oneindia Tamil News

சேலம்:

தர்மபுரியில் வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவிகள் 3 பேர் எரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நேற்று ஒரே நாளில்5 பேர் சாட்சியம் அளித்தனர்.

தர்மபுரியில் அதிமுகவினரால் வேளாண்மை பல்கலைக்கழக மாணவிகள் 3 பேர் உயிரோடு எரித்துக் கொலை செய்யப்பட்டவழக்கு சேலம் கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இதுவரை மொத்தம் 95 சாட்சிகள் சாட்சியம் அளித்தனர். இதில் பலர் பிறழ் சாட்சிகளாக மாறி சாட்சியம் அளித்துள்ளனர். இந்நிலையில் நேற்று 5 பேர் சாட்சியம் அளித்தனர்.

சம்பவம் நடந்த போது கிருஷ்ணகிரி டி.எஸ்.பியாக இருந்த விஜயலட்சுமி, கிராம நிர்வாக அதிகாரிகள் மோகன், ஜெயபால்உள்ளிட்ட 5 பேர் இன்று சாட்சியம் அளித்தனர். விசாரணை இன்றும் தொடர்ந்து நடைபெறுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X