For Daily Alerts
Just In
தர்மபுரி பஸ் எரிப்பு: ஒரே நாளில் 5 பேர் சாட்சியம்
சேலம்:
தர்மபுரியில் வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவிகள் 3 பேர் எரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நேற்று ஒரே நாளில்5 பேர் சாட்சியம் அளித்தனர்.
தர்மபுரியில் அதிமுகவினரால் வேளாண்மை பல்கலைக்கழக மாணவிகள் 3 பேர் உயிரோடு எரித்துக் கொலை செய்யப்பட்டவழக்கு சேலம் கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.இதுவரை மொத்தம் 95 சாட்சிகள் சாட்சியம் அளித்தனர். இதில் பலர் பிறழ் சாட்சிகளாக மாறி சாட்சியம் அளித்துள்ளனர். இந்நிலையில் நேற்று 5 பேர் சாட்சியம் அளித்தனர்.
சம்பவம் நடந்த போது கிருஷ்ணகிரி டி.எஸ்.பியாக இருந்த விஜயலட்சுமி, கிராம நிர்வாக அதிகாரிகள் மோகன், ஜெயபால்உள்ளிட்ட 5 பேர் இன்று சாட்சியம் அளித்தனர். விசாரணை இன்றும் தொடர்ந்து நடைபெறுகிறது.
Comments
Story first published: Friday, August 12, 2005, 5:30 [IST]