ஹஜ்: அடுத்த ஆண்டு 1 லட்சம் பேருக்கு அனுமதி
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
அடுத்த ஆண்டுக்கான ஹஜ் பயணிகளின் கோட்டா 1 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் ஹஜ் கமிட்டி மூலம் புனிதப் பயணம் மேற்கொள்ள இந்த ஆண்டு 82,000 பேருக்கு அனுமதி தரப்பட்டது. கடந்தஆண்டு இது 72,000 ஆக இருந்தது. இந் நிலையில் அடுத்த ஆண்டு 1 லட்சம் பேருக்கு ஹஜ் பயணம் செல்ல வாய்ப்பளிக்கமத்திய அரசு முடிவு செய்துள்ளது.இதற்கான முடிவு நேற்றிரவு கூடிய மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்டது.
இது குறித்து செய்தி, ஒளிபரப்புத்துறை அமைச்சர் ஜெய்பால் ரெட்டி கூறுகையில், ஹஜ் கமிட்டி மூலம் புனிதப் பயணம் செல்லவருமான வரி செலுத்தாத சாதாரண பொருளாதார வசதியே உள்ள குடி மக்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications