ஜெயலட்சுமி: இன்ஸ்பெக்டர் இளங்கோவனுக்கு எதிரான உத்தரவு ரத்து
மதுரை:
ஜெயலட்சுமி வழக்கில் கைதாகி ஜாமீனில் விடுதலையாகியுள்ள இன்ஸ்பெக்டர் இளங்கோவன் தனது அரசு வீட்டைக் காலிசெய்யுமாறு மதுரை மாநகர காவல்துறை ஆணையர் பிறப்பித்த உத்தரவை மதுரை உயர்நீதிமன்றக் கிளை ரத்து செய்துள்ளது.
ஜெயலட்சுமி விவகாரத்தில் அடிபட்ட இளங்கோவன், அவரது குடும்பத்தினரைக் கடத்திய வழக்கில் கைதாகி ஜாமீனில்விடுதலையானார். இந்த வழக்கைத் தொடர்ந்து அவர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.இவர் ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலையத்தில் கடைசியாக வேலை பார்த்து வந்தார். தற்போது குடும்பத்துடன் கிரைம் பிராஞ்ச்காவலர் குடியிருப்பில் வசித்து வருகிறார். ஜெயலட்சுமி விவகாரத்தையடுத்து அவர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டபின்னர், உடனடியாக அரசு வழங்கிய வீட்டைக் காலி செய்யுமாறு கூறி மதுரை காவல்துறை ஆணையர் இளங்கோவனுக்குநோட்டீஸ் அனுப்பினார்.
இதை எதிர்த்து இளங்கோவன் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார். அதில், மதுரை காவல்துறைஆணையரின் உத்தரவை ரத்து செய்யுமாறு கோரியிருந்தார்.
இளங்கோவன் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் காந்தி மற்றும் அஜ்மல் கான் இருவரும், மனுதாரர் மீதான குற்றச்சாட்டுக்கள்இதுவரை எந்த நீதிமன்றத்திலும் உறுதி செய்யப்படவில்லை, நிரூபிக்கப்படவில்லை.
இந் நிலையில் மனுதாரரை வீட்டைக் காலி செய்யுமாறு அரசு கூறுவது விதிமுறைகளுக்குப் புறம்பானதாகும் என்று வாதாடினர்.அவர்களது வாதத்தைக் கேட்ட நீதிபதி ஏ.குலசேகரன், மாநகர காவல்துறை ஆணையர் பிறப்பித்த உத்தரவை வாபஸ் பெறுமாறுகூறி உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications