தனியார்துறையிலும் இட ஒதுக்கீடு: பிரதமருக்கு கருணாநிதி கோரிக்கை
சென்னை:
தனியார் துறையிலும் பொதுத்துறை நிறுவனங்களிலும் தலித்கள், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர்ஆகியோருக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என திமுக கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்குக்கு திமுக தலைவர் கருணாநிதி எழுதியுள்ள கடிதத்தில்,பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு தொடர்பாக விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல்செய்யப்படவுள்ள சட்டத் திருத்த மசோதாவில் தனியார் துறை இட ஒதுக்கீட்டுக்கும் வழி வகை செய்ய வேண்டும்.
அதே போல மத்திய அரசுப் பணிகளில் உயர் வருமானம் கொண்ட பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு இல்லை என்றவிதியையும் ரத்து செய்ய வேண்டும்.
மத்திய அரசின் நிதி உதவியோடு நடக்கும் ஐ.ஐஎம்., ஐ.ஐ.டி. போன்ற உயர் கல்வி நிறுவனங்கள், தொழில்நுட்பக் கல்விநிறுவனங்களிலும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இட ஒதுக்கீட்டை அமலாக்க வேண்டும்.
மேலும் பிற்படுத்தப்பட்டோருக்கு என தனி நாடாளுமன்றக் குழுவை அமைக்க வேண்டும்.
மக்கள் தொகை விகிதப்படி கல்வி, வேலைவாய்ப்பில் பிற்படுத்தப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்களுக்கு அந்தந்தமாநிலங்களே தேவையான அளவு இட ஒதுக்கீட்டை அமல்படுத்த மாநிலங்களுக்கு அதிகாரம் வழங்கும் வகையில் சட்டத்திருத்தம் செய்ய வேண்டும்.
இட ஒதுக்கீட்டு சட்டத் திருத்த தொடர்பாக அமைக்கப்பட்ட நாடாளுமன்றக் கமிட்டியின் தலைவர் சுதர்சன நாச்சியப்பன்தங்களிடம் (பிரதமரிடம்) தந்துள்ள அறிக்கையைப் படித்தேன். அதில் உள்ள அம்சங்கள் எனக்கு பூரண திருப்தியைத்தந்துள்ளது. அந்த அறிக்கையை உடனடியாக அமலாக்க வேண்டும்.
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.