பெட்ரோல் விலையை உயர்த்தியே ஆக வேண்டும்: அய்யர்
படின்டா:
சர்வதேச சந்தையில் எண்ணை விலை கூடியிருப்பதால் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தியே ஆக வேண்டியநிர்பந்தம் ஏற்பட்டுள்ளது என பெட்ரோலியத் துறை அமைச்சர் மணிசங்கர அய்யர் கூறியுள்ளார்.
அவர் கூறுகையில், சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள விலை உயர்வு காரணமாக இந்தியாவிலும் பெட்ரோல், டீசல் விலையைஉயர்த்தியாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள விலை உயர்வின்படி பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 3.25ம், டீசல் லிட்டருக்கு ரூ.4ம் உயர்த்தவேண்டும். ஆனால் பொதுமக்கள் மீது அதிக சுமையை ஏற்ற நாங்கள் விரும்பவில்லை. இதனால் குறைந்தபட்சமாவதுவிலையைக் கூட்ட வேண்டியுள்ளது.
தறபோதைய சர்வதேச சந்தை விலை நிலவரப்படி பெட்ரோல் விலையை உயர்த்தாவிட்டால் இந்திய எண்ணை நிறுவனங்கள்பெரும் நஷ்டத்தில் மூழ்கும். அடுத்த ஆண்டுக்குள் பெட்ரோல் நிறுவனங்களுக்கு ரூ. 20,000 கோடி வரை நஷ்டம் உண்டாகும்.
இது குறித்த அனைத்து பிரச்சினைகளும் மந்திரிசபைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும். அதன் பிறகே விலை உயர்வு குறித்துமுடிவெடுக்கப்படும். நான் மட்டும் நினைத்தால் விலையை உயர்த்த முடியாது. விலை உயர்வு குறித்து கூட்டணிக்கட்சிகளிடமும் கருத்து கேட்கப்படும் என்றார் மணிசங்கர அய்யர்.