என்கெளண்டர் கொலை: சிபிஐ விசாரணைக்கு உயர்நீதிமன்றம் தடை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சேலம் அருகே ஒமலூரில் பிரபல ரவுடி கர்ணன் என்கெண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைநடத்த உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு, டிவிஷன் பெஞ்ச் இடைக்காலத் தடைவிதித்துள்ளது.

சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்தவன் கர்ணன். பல்வேறு கொலை, வழிப்பறி, கட்டப் பஞ்சாயத்துக்களில்தொடர்புடையவன். கடந்த ஆண்டு போலீஸார் இவரை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது போலீஸ்பிடியிலிருந்து தப்பிக்க முயன்றபோது ஏற்பட்ட மோதலில் கர்ணனை போலீஸார் சுட்டுக் கொன்றனர்.

ஆனால் தனது கணவரை அப்போதைய சேலம் காவல்துறைக் கண்காணிப்பாளர் பொன் மாணிக்கவேலும், உயரதிகாரிகளும்சேர்ந்து வேண்டும் என்றே திட்டமிட்டுக் கொலை செய்து விட்டனர். எனவே இதுகுறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என்று கோரி கர்ணனின் மனைவி சென்னை உயர்நீதிமன்றத்தில வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.டி.தினகரன், கர்ணனின் சாவு குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டார். இந் நிலையில்தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து தலைமை நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ, நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா ஆகியோர் அடங்கியடிவிஷன் பெஞ்ச் முன்பு அரசுத் தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது.

இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதிகள், தனி நீதிபதியின் உத்தரவுக்குத் தடை விதித்து உத்தரவிட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+