For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கோட்டை அமீர் கொலை: அல்-உம்மாவினருக்கு ஆயுள் தண்டனை ரத்து

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

கோவையைச் சேர்ந்த கோட்டை அமீர் படுகொலை வழக்கில், அல் உம்மா தலைவர் எஸ்.ஏ.பாட்ஷாவின் மகன் உள்ளிட்ட 4பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

கோவை மாவட்டத்தில் மத நல்லிணக்கத்திற்காக பாடுபட்டு வந்தவர் கோட்டை அமீர். கோவை மாவட்ட அமைதிக் குழுவின்உறுப்பினராகவும், சிறுபான்மைப் பிரிவு என்ற அமைப்பின் அமைப்பாளராகவும் இருந்து வந்தார் அமீர்.

கோவை குண்டுவெடிப்புக் கலவரத்திற்குப் பிறகு அல் உம்மாவினரின் செயல்பாடுகளைக் கடுமையாக சாடிப் பொதுக்கூட்டங்களில் பேசி வந்தார் அமீர். மேலும், பாட்சா என்ற தனி மனிதரை நம்பி இஸ்லாமிய சமுதாயத்தினர் இருக்கக் கூடாதுஎன்றும் அவர் பேசி வந்ததால் அல் உம்மா அமைப்பினர் அமீர் மீது கோபம் கொண்டனர்.

இந் நிலையில் கடந்த 1994ம் ஆண்டு மார்ச் 2ம் தேதி கோணியம்மன் கோவில் திருவிழாவின்போது கோட்டை அமீருக்குநெற்றியில் குங்குமம் வைத்து விழா ஏற்பாட்டாளர்கள் கெளரவித்தனர். இதற்கு அல் உம்மாவினர் கடும் கண்டனம்தெரிவித்திருந்தனர்.

இந்தத் திருவிழா நடந்த 15 நாட்களுக்குப் பிறகு தனது நண்பர் ஒருவருடன் டவுன்ஹால் பகுதியில் சைக்கிளில் அமீர் சென்றுகொண்டிருந்தபோது, 4 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து சரமாரியாக குத்திக் கொலை செய்தனர்.

இந்த படுகொலை தொடர்பாக அல் உம்மா அமைப்பின் தலைவர் பாட்சாவின் மகன் சித்திக் அலி, சாகுல் ஹமீது, முகம்மதுமுத்து, முகம்மது ஷபி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கோவை 2வது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இந்த வழக்குவிசாரிக்கப்பட்டது. இறுதியில் 4 பேருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் 4 பேரும் மேல் முறையீடு செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதிகள்கற்பகவிநாயகம், சர்தார் சக்காரியா உசேன் ஆகியோர், நான்கு பேர் மீதான குற்றச்சாட்டுக்களும் சந்தேகத்திற்கு இடமின்றிநிரூபிக்கப்படவில்லை. எனவே ஆயுள் தண்டனை ரத்து செய்யப்படுவதாக தீர்ப்பளித்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X