கொலையில் துளியும் தொடர்பில்லை: புலிகள் மறுப்பு

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் கொலைக்கு அதிகாரப் போட்டியில் ஈடுபட்டுள்ள ஆட்சியாளர்களே காரணம் எனவிடுதலைப் புலிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்தக் கொலைக்கும் தங்களுக்கும் துளியும் தொடர்பில்லை என அவர்கள்திட்டவட்டமாகக் கூறியுள்ளனர்.

புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவரான தமிழ்ச்செல்வன் தமிழ்நெட் இணையத் தளத்தில் கூறியுள்ளதாவது:

கதிர்காமரின் கொலைப் பழியை அவரச, அவசரமாக புலிகள் மீது இலங்கை அரசு போடுவதை மிகக் கடுமையாகக்கண்டிக்கிறோம். இந்தக் கொலைக்கும் புலிகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

நார்வே மூலமான அமைதிப் பேச்சுவார்த்தையை சீர் குலைக்க இலங்கை அரசுக்குள்ளேயே சில சக்திகள் தீவிரமாக முயன்றுவருகின்றன.

ஆட்சியில் உள்ளவர்களுக்கு இடையே ஏகத்துக்கும் கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. அதிகாரத்தைக் கைப்பற்றும்முயற்சியில் அவர்களுக்கு இடையே உள் பகையும் மோதலும் தீவிரமாக நடந்து வருகிறது.

இதனால் இந்தக் கொலைக்குக் காரணமானவர்கள் அவர்களுக்குள் தான் இருக்கிறார்கள். போர் நிறுத்த ஒப்பந்தத்தை எதிர்க்கும்சக்திகள் நாட்டின் தென் பகுதியில் ஏராளமாக உள்ளன.

மேலும் இலங்கை ராணுவத்தின் ஒரு பிரிவே கூட போர் நிறுத்த உடன்பாட்டை சீர்குலைக்கும் சதித் திட்டத்துடன் செயல்பட்டுவருகின்றன.

இதனால் இந்தக் கொலைக்குக் காரணமாகவர்களைக் கண்டுபிடிக்க முழுமையான, நியாயமான விசாரணையை இலங்கை அரசுநடத்த வேண்டும். எந்தக் கொலை நடந்தாலும் உடனே புலிகளைக் குற்றம் சாட்டும் போக்கு நாட்டின் தென் பகுதியில்உள்ளவர்கள் (சிங்களர்கள்) மத்தியில் அதிரித்து வருகிறது என்றார் தமிழ்ச்செல்வன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+