கிரிக்கெட்: கராச்சியில் விளையாட இந்தியா சம்மதம்
ஆகஸ்ட் 14, 2005
![]()
கராச்சி:
கராச்சியில் அடுத்த வருடம் டெஸ்ட் போட்டி விளையாட இந்தியா சம்மதித்துள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய அதிகாரிதெரிவித்துள்ளார்.
கடந்த 2000ம் ஆண்டு பாகிஸ்தானிலுள்ள கராச்சியில் பாகிஸ்தானுடன் டெஸ்ட் போட்டி ஒன்றில் இங்கிலாந்து விளையாடியது.அந்தப் போட்டியில் பாகிஸ்தான் தோல்வியடையும் கட்டத்தில் இருந்தது. இதனால் ஆவேசமடைந்த ரசிகர்கள் கடும் ரகளையில்ஈடுபட்டனர்.இதனால் ரசிகர்கள் அனைவரையும் வெளியேற்றி அந்தப் போட்டி நடத்தப்பட்டது. அந்தப் போட்டியில் இங்கிலாந்து வெற்றிபெற்றது.
இந்தப் போட்டிக்குப் பிறகு கராச்சியில் விளையாட இங்கிலாந்து அணி மறுத்து விட்டது. இதன் பிறகு கராச்சியில் அடிக்கடிநடந்த குண்டு வெடிப்புகளால் இந்தியா, ஆஸ்திரேலியா, மேற்கிந்திய தீவுகள், தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகளும்கராச்சியில் விளையாட மறுத்து விட்டது.
இந் நிலையில் அடுத்த வருடம் இந்திய அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்கிறது. அப்போது கராச்சியில் டெஸ்ட் போட்டிவிளையாட இந்தியா விருப்பம் தெரிவித்துள்ளதாக பாகிஸ்தானின் கிரிக்கெட் வாரிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
டெஸ்ட் போட்டி தவிர 3 நாள் பயிற்சி ஆட்டம் ஒன்றிலும் இந்தியா விளையாட விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், இந்தியாவின்இந்த முடிவால் கராச்சி நகரின் மீதுள்ள கறை நீங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications