உர் என்று இருக்காதீர்கள்: போலீஸாருக்கு டிஜிபி அட்வைஸ்
சென்னை:
பொதுமக்களுக்கு போலீஸார் தினமும் குட்மார்னிங் சொல்ல வேண்டும் என்று டிஜிபி அலெக்சாண்டர் அறிவுறுத்தியுள்ளார்.
சுதந்திர தின விழாவினை முன்னிட்டு கோட்டை முன்பு போலீஸாரின் அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது. அணிவகுப்பைபார்வையிட்ட பிறகு டிஜிபி அலெக்சாண்டர் பேசுகையில், தினமும் ஒரு நல்ல காரியம் செய்ய வேண்டும் என்று ஏற்கனவேஉங்களுக்கு நான் சொல்லியிருக்கிறேன்.அதை நீங்கள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். போக்குவரத்து போலீஸாருக்கு பொறுமை மிகவும் அவசியம். சிக்னல்களில்நிற்கும் போலீஸார் எப்போதும் முகத்தை "உம்மென்று வைத்திருக்கிறார்கள். இவ்வாறு இருக்கக் கூடாது.நீங்களும் உற்சாகமாக இருந்து பொதுமக்களையும் உற்சாகப்படுத்த வேண்டும். அவர்களைப் பார்க்கும் போது புன்னகையுடன்காலையில் குட்மார்னிங்கும், மாலையில் குட் ஈவினிங்கும் சொல்லுங்கள்.
அவர்களிடம் ஹவ் ஆர் யூ, கேன் ஐ ஹெல்ப் யூ என்று அன்புடன் கேட்டுப் பாருங்கள். இதனால் பல்வேறு டென்ஷனோடுசிக்னலில் நிற்கும் பொதுமக்கள் மிகுந்த மன நிறைவு அடைவார்கள். அதுமட்டுமல்ல, உங்களுக்கும், பொதுமக்களுக்கும்இடையே நல்லுறவும் மலரும்.
அதுமட்டுமல்ல, பொதுமக்களை வா, போ என்று ஒருமையில் பேசி திட்டக்கூடாது. முக்கிய பிரமுகர்கள் அல்லது அதிகாரிகளின்வாகனங்கள் வந்தால் கொஞ்சம் பொறுங்கள், ஒத்துழைப்பு தாருங்கள் என்று வாகன ஓட்டுனர்களிடம் பணிவுடன் கூறவேண்டும். கண்டிப்பு கூடாது என்றார்.