திமுக கூட்டணியில் சபல புத்தி இல்லை: எல்.கணேசன்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மத்திய அமைச்சரவையில் மதிமுக சேருமா, சேராதா என்பது குறித்து வைகோ தான் முடிவு செய்வார் என அக்கட்சியின்அவைத் தலைவர் எல்.கணேசன் கூறியுள்ளார்.
தமிழக காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஜி.கே.வாசனை, எல்.கணேசன் நேரில் சந்தித்து வாழ்த்துதெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ஜனநாயக முற்போக்குக் கூட்டணியில் எந்தப் பிரச்சினையும்இல்லை.கூட்டணியில் விரிசல் என்று வெளியாகும் தகவல்கள் அனைத்துமே பொய்யானவை. கூட்டணியில் யார் இருந்தாலும்,இல்லாவிட்டாலும் மதிமுக தொடர்ந்து நீடிக்கும். திமுகவுடன் இணைந்து தான் சட்டசபைத் தேர்தலை சந்திப்போம்.
சபலத்திற்கு மயங்கும் புத்தி உடையவர்கள் யாரும் திமுக கூட்டணியில் இல்லை. மத்திய அமைச்சரவையில் மதிமுக சேருவதுகுறித்து வைகோ தான் முடிவு செய்ய வேண்டும். மத்திய அமைச்சரவையில் சேருவதில்லை என்பதை கொள்கை முடிவாகவைத்துள்ளோம்.
எனவே அதை மாற்ற வேண்டுமானால் பொதுச் செயலாளரான வைகோ தான் தீர்மானிக்க வேண்டும் என்றார் எல்.கணேசன்.












Click it and Unblock the Notifications