செப். 3ல் பிரதமர் சென்னை வருகை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பிரதமர் மன்மோகன் சிங் செப்டம்பர் 3ம் தேதி சென்னை வருகிறார்.
சென்னை தாம்பரம் சானட்டோரியம் பகுதியில் ரூ. 47 கோடி மதிப்பில் தேசிய சித்த மருத்துவ ஆராய்ச்சிக் கழகம்நிறுவப்பட்டுள்ளது. இதைத் தொடங்கி வைப்பதற்காக மன்மோகன்சிங் செப்டம்பர் 3ம் தேதி சென்னை வருகிறார்.தமிழக அரசுடன் இணைந்து மத்திய அரசு இந்த ஆராய்ச்சி கழகத்தை நிறுவியுள்ளது. சித்த மருத்துவத்தில் பட்ட மேற்படிப்புவகுப்புகள் இங்கு நடத்தப்படும். ஆறு பிரிவுகளில் பட்ட மேற்படிப்பு வகுப்புகள் தொடங்கப்படவுள்ளன.
மருத்துவ மேற்படிப்பு மட்டுமல்லாமல் அனைத்து வசதிகளுடன் கூடிய சித்த மருத்துவமனையாகவும் இது செயல்படும்.
தொடக்க விழாவுக்கான ஏற்பாடுகளை மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணி பார்வையிட்டார்.












Click it and Unblock the Notifications