ஐடியல் சுப்ரமணியத்தின் 2 கூட்டாளிகள் கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மோசடி மன்னன் ஐடியல் சுப்ரமணியத்தின் 2 முக்கியக் கூட்டாளிகளை மத்திய குற்றப் பிரிவு போலீஸார் இன்று சென்னையில்கைது செய்தனர்.
வங்கிக் கடன் பெற்றுத் தருவதாக கூறி மோசடி செய்ததாக கைது செய்யப்பட்டுள்ள ஐடியல் சுப்ரமணியத்தை சமீபத்தில்வத்தலகுண்டு, விராலிப்பட்டி, கொடைக்கானல் ஆகிய ஊர்களுக்கு அழைத்துச் சென்று சென்னை மத்திய குற்றப் பிரிவுபோலீஸார் விசாரணை நடத்தினர்.இந்த விசாரணையின் போது ஐடியலின் கூட்டாளிகளான விராலிப்பட்டியைச் சேர்ந்த செளந்தரபாண்டியன், செம்பட்டியைச்சேர்ந்த மணிகண்டன் ஆகியோரை விசாரணைக்காக போலீஸார் சென்னைக்கு அழைத்து வந்தனர்.
சென்னையில் வைத்து இவர்களிடம் விசாரணை நடத்தியபோது, ஐடியலுக்கு பல போலியான ஆவணங்களை தயாரித்துக்கொடுத்ததாக இருவரும் ஒப்புக் கொண்டனர். இதைத் தொடர்ந்து இருவரையும் போலீஸார் இன்று கைது செய்தனர்.
இதற்கிடையே, ஐடியல் அணிந்து வந்த 2 வைர பிரேஸ்லெட்டையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.












Click it and Unblock the Notifications