எப்படிப் பேச வேண்டும்? பேச்சாளர்களுக்கு கருணாநிதி டிப்ஸ்
சென்னை:
சென்னையில் நடந்த திமுக தலைமைக் கழக பேச்சாளர்களுக்கு, பொதுக் கூட்டங்களில் எந்த விஷயத்தை முதன்மைப்படுத்திப்பேச வேண்டும், எதற்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்பது குறித்து பல்வேறு டிப்ஸ்களை அளித்து அறிவுரை கூறினார்கட்சித் தலைவர் கருணாநிதி.
திமுக பேச்சாளர்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை அண்ணா அறிவாலயம் வளாகத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நடந்தது.இக்கூட்டத்திற்குக் கருணாநிதி தலைமை தாங்கினார்.நிகழ்ச்சியில் திமுக கொள்கை பரப்புச் செயலாளர் செல்வேந்திரன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். பொதுச் செயலாளர்அன்பழகன் சிறப்புரையாற்றினார்.
கருணாநிதி பேசுகையில் சட்டசபைத் தேர்தல் நெருங்கி வருவதால், திமுக பொதுக் கூட்டங்களில் பேச்சாளர்கள் எந்தவிஷயத்திற்கு முக்கியத்துவம் தர வேண்டும், எதை அதிகம் வலியுறுத்திப் பேச வேண்டும் என்பது உள்பட பல்வேறுவிஷயங்கள் குறித்து டிப்ஸ் கொடுத்தார்.
நூற்றுக்கும் மேற்பட்ட திமுக பேச்சாளர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். துணைப் பொதுச் செயலாளர்மு.க.ஸ்டாலின், பொருளாளர் ஆற்காடு வீராசாமி உள்ளிட்ட நிர்வாகிகளும் இதில் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications