இன்று கதிர்காமர் உடல் தகனம்: பலத்த பாதுகாப்பு
கொழும்பு:
சுட்டுக் கொல்லப்பட்ட இலங்கை அமைச்சர் கதிர்காமரின் உடல் தகனம் இன்று நடைபெறுகிறது. இதில் இந்தியா, நார்வே மற்றும்பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர்.
இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் லட்சுமண் கதிர்காமர் கடந்த வெள்ளிக்கிழமை இரவு அடையாளம் தெரியாத சிலரால்சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தால் இலங்கையில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
இந்தக் கொலைக்கு இந்தியா, அமெரிக்கா, கனடா உட்பட பல நாடுகள் கடும் கண்டம் தெரிவித்துள்ளன.
இதற்கிடையே கதிர்காமரின் கொலை குறித்து தீவிர விசாரணை நடத்திய இலங்கை போலீஸார் ஒரு பெண் உட்பட 12தமிழர்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் இது தொடர்பாக சில சிங்களர்களிடமும் விசாரணை நடைபெற்றுவருகிறது.
கொல்லப்பட்ட கதிர்காமரின் உடல் கொழும்பிலுள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.அவரது உடல் தகனம் கொழும்பு சுதந்திர சதுக்கத்திற்கு எதிரே உள்ள பூங்காவில் முழு அர சு மரியாதையுடன் இன்றுநடைபெறுகிறது.
இந்த இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் இந்தியா, நார்வே, அமெரிக்கா, இங்கிலாந்து உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தஅமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர். இந்தியாவின் சார்பில் வெளியுறவுத் துறை அமைச்சர் நட்வர் சிங், பாதுகாப்புத் துறைஅமைச்சர் பிரணாப் முகர்ஜி ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
விடுதலைப் புலிகள் மற்றும் இலங்கை அரசுக்கு இடையே அமைதியை நிலைநாட்ட பெரும் முயற்சி எடுத்து வரும் நார்வேநாட்டின் சார்பில் அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜேன் பீட்டர்ஸன் மற்றும் துணை வெளியுறவுத் துறை அமைச்சர்விடார் ஹெல்ஜெஸன் ஆகியோர் இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர்.
கதிர்காமரின் இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு நார்வே அமைச்சர்கள் 2 நாட்கள் கொழும்பில் தங்கி, இலங்கைஅரசு அதிகாரிகளுடன் தற்போது எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.
கதிர்காமரின் இறுதிச் சடங்கு நிகழ்ச்சியையொட்டி கொழும்பில் வரலாறு காணாத அளவிற்கு பலத்த பாதுகாப்புபோடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications