தீவிரவாதம்: பாகிஸ்தானுக்கு பிரதமர் அட்வைஸ்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

இந்தியர்கள் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை என்பதை உணர்ந்து அனைவரும் இணைந்து செயல்பட்டு புதிய இந்தியாவைஉருவாக்குவோம் என்று இன்று காலை டெல்லி செங்கோட்டையில் கொடியேற்றி வைத்து பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.

நாட்டின் 59வது சுதந்திர தின விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இன்று காலை டெல்லி செங்கோட்டையில்பிரதமர் மன்மோகன் சிங் தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார்.

அப்போது அவர் பேசுகையில், வேலை வாய்ப்புகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். கிராமப்புற வேலை வாய்ப்புகளுக்குஉத்திரவாத மசோதா நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்படும். வேலை வாய்ப்புகளைப் பெருக்குவதின் மூலம் தான் வறுமையைஒழிக்க முடியும்.

ஒவ்வொருவருக்கும் வாழ்க்கைக்குத் தேவையான அடிப்படை வசதிகள் கிடைக்காத வரை நாம் முழு சுதந்திரம் பெற்றுவிட்டதாக கூற முடியாது.

நாட்டின் பொருளாதாரம் வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. இந்த வளர்ச்சியை அடுத்த 10 ஆண்டுகளுக்கு தொடர்ந்துபராமரித்தால் தான் வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம், பட்டினி போன்றவற்றை போக்க முடியும்.

உலகிலேயே நாம் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்பதை உணர வேண்டும். நாம் எதிலுமே இரண்டாவதாக இருக்கக்கூடாது. முதலாவது இடத்தை நோக்கியே நமது சிந்தனை இருக்க வேண்டும்.

தற்போது உலகம் முழுவதும் தீவிரவாதம் வளர்ந்து வருகிறது. இதை நாம் ஒடுக்கியே ஆக வேண்டும். தீவிரவாதிகளைஒடுக்குவதில் பாகிஸ்தான் முழு அக்கறை காட்ட வேண்டும். இந்த விஷடத்தில் அரை மனதுடன் செயல்பட்டால் எந்த பலனும்கிடைக்காது.

மக்களுக்கும், அரசுக்கும் இடையே தற்போது வேலி எதுவும் இல்லை. எனவே நாம் ஒன்றாக இணைந்து செயல்பட்டு விரைவில்புதிய இந்தியாவை உருவாக்கி சாதனை படைப்போம் என்றார் பிரதமர்.

முன்னதாக காந்தி சமாதி, ஜவகர்லால் நேரு சமாதி, லால் பகதூர் சமாதி மற்றும் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோரின்சமாதிகளுக்கு சென்று அஞ்சலி செலுத்திய பிறகு பிரதமர் மன்மோகன் சிங் செங்கோட்டைக்கு வந்தார்.

செங்கோட்டையில் பிரதமரை பாதுகாப்புத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி வரவேற்றார். பின்னர் முப்படைகளின்அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றார்.

சுதந்திர தின விழாவில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர்கள் வி.பி. சிங், குஜ்ரால், தேவ கெளடா,நாடாளுமன்ற சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி மற்றும் மத்திய அமைச்சர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு செங்கோட்டையில் முப்படைகளின் கண்கவர் அணிவகுப்பு நிகழ்ச்சியும், பல்வேறுமாநிலங்களின் சார்பில் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+