கத்தாரில் 10,000 இந்தியர்களுக்கு வேலை பறிபோகும் ஆபத்து
Subscribe to Oneindia Tamil
துபாய்:
கத்தாரில் சிறிய ஹோட்டல்கள் நடத்துவதற்கு கடும் விதிமுறைகளை அமல்படுத்த அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளதால்10,000க்கும் மேற்பட்ட இந்தியர்களுக்கு வேலை பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கத்தாரில் ஏராளமான சிறிய ஹோட்டல்கள் மற்றும் ஜூஸ் கடைகளை இந்தியர்கள் நடத்தி வருகின்றனர். இங்குபணிபுரிபவர்களும் பெரும்பாலும் இந்தியர்களே. அதிலும் குறிப்பாக கேரளாவை சேர்ந்தவர்கள் தான் அதிகம்.இந் நிலையில் வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் இது போன்ற சிறிய ஹோட்டல்கள் மற்றும் ஜூஸ் கடைகளுக்கு கடும்விதிமுறைகளை அமல்படுத்த அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
குறிப்பாக ஹோட்டல்களில் சுகாதாரத்தில் தான் கடுமையான விதிமுறைகள் கொண்டு வரப்படவுள்ளன. இதனால் பலஹோட்டல்கள் மூடப்படும் நிலை உருவாகியுள்ளது.
இதனால் இவற்றில் பணிபுரியும் 10,000 பேருக்கும் மேற்பட்ட இந்தியர்களுக்கு வேலை பறிபோகும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications