பெட்ரோல் டேங்கர்கள் மூலம் தாக்குதல்: அல் கொய்தா திட்டம்

Subscribe to Oneindia Tamil

லண்டன்:

இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் பெட்ரோல் டாங்கர்களைக் கடத்தி அதன் மூலம் பயங்கர தாக்குதல் நடத்த அல் கொய்தாதீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க உளவுத் துறை எச்சரித்துள்ளது.

கடந்த 2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி நியூயார்க்கிலுள்ள உலக வர்த்தக மைய கட்டிடத்தின் மீது விமானங்களை கடத்திஅல் கொய்தா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். இதில் சுமார் 3,000க்கும் அதிகமானோர் பலியானார்கள்.

உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த தாக்குதல் நடந்து வருகிற செப்டம்பருடன் 4 வருடங்கள் முடிகிறது. இதையொட்டிமீண்டும் தாக்குதல் நடத்த அல் கொய்தா தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த முறை அமெரிக்கா தவிர இங்கிலாந்திலும் தாக்குதல் நடத்த இவர்கள் திட்டமிட்டுள்ளனர் என்று உளவுத் துறைஅதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

இம் முறை தற்கொலைப் படை மூலம் பெட்ரோல் டாங்கர்களை கடத்தி அமெரிக்கா மற்றும் இங்கிலாந்திலுள்ள முக்கிய வர்த்தகமையங்கள் மீது தாக்குதல் நடத்தி இரு நாடுகளின் பொருளாதாரத்தை சீர்குலைக்க தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளனர்.

உலக வர்த்தக மைய தாக்குதல் நடந்து வரும் செப்டம்பரில் 4 ஆண்டுகள் நிறைவு பெறுவதால் இதையொட்டி அந்த சமயத்தில்மீண்டும் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளனர் என்று அமெரிக்க உளவுத் துறையினர் கூறுகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+