சுய நிதி கல்லூரிகள்: போராட்டம் நடத்த போகும் வி.டி.ஆரு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சுயநிதி பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதைஎதிர்த்து போராட்டம் நடத்தப் போவதாக லட்சிய திமுக தலைவரும், திரைப்பட இயக்குனருமான விஜய டி ராஜேந்தர்அறிவித்துள்ளார்.
இதுகுறித்து ராஜேந்தர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தனியார் சுயநிதி பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகளில்தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் பெற்று வந்த இட ஒதுக்கீட்டு சலுகையை உச்சநீதிமன்றம் பறித்துள்ளது.தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அனைத்துத் துறைகளிலும் இட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும். இதைவலியுறுத்தியும், உச்சநீதிமன்றத் தீர்ப்பை மாற்றக் கோரியும் லட்சிய திமுக விரைவில் போராட்டம் நடத்தும் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications