For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அப்பு ஜாமீன் மனு: காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் கண்டிப்பு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சங்கரராமன் கொலை வழக்கில் ஜாமீனில் விடுதலை செய்யக் கோரி கூலிப் படைத் தலைவன் அப்பு தொடர்ந்துள்ள ஜாமீன்மனுவுக்கு வருகிற 23ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம்கண்டிப்புடன் கூறியுள்ளது.

சங்கரராமன் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளிகளில் ஒருவரான அப்பு, தன்னை ஜாமீனில் விடுதலை செய்யக் கோரிசெங்கல்பட்டு செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு செய்தார். அந்த மனுவை செங்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.

இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார் அப்பு. இந்த மனுவை விசாரித்த நீதிபதி தணிகாச்சலம்,இன்றைக்குள் (செவ்வாய்க்கிழமை) பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறி காவல்துறையினருக்குஉத்தரவிட்டிருந்தார்.

இந் நிலையில் இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது பதில் மனு தாக்கல் செய்ய மேலும் அவகாசம் கோரிகாவல்துறை சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதையடுத்து வருகிற 23ம் தேதிக்கு விசாரணையை தள்ளி வைத்த நீதிபதி, அதற்கு மேலும் அவகாசம் தர முடியாது.அன்றைக்குள் பதில் மனுவை காவல்துறையினர் தாக்கல் செய்ய வேண்டும் என்று கண்டிப்புடன் கூறினார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X