சென்னையில் 10 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை:
சென்னையில் இன்று 10 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போனில் மிரட்டல்விடுத்தவனை போலீஸார் தேடி வருகிறார்கள்.
சென்னையிலுள்ள செயின்ட் ஜோஸப் பள்ளிக்கு இன்று காலை 8 மணியளவில் ஒரு போன் வந்தது. அதில் பேசியவன் பள்ளியில்வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறி போனை வைத்து விட்டான்.இது குறித்து போலீஸுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸார் மோப்ப நாயுடன் விரைந்து வந்து வகுப்பறைகளில்சோதனை நடத்தினார்கள். ஆனால் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. காலை நேரம் என்பதால் வெடிகுண்டு புரளியால்அதிர்ச்சியடைந்த மாணவர்களின் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை அழைத்து வந்த கையோடு வீட்டுக்கு கூட்டிச் சென்றுவிட்டனர்.
இந் நிலையில் சென்னையிலுள்ள மேலும் சில பள்ளிகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. சூளையிலுள்ள ஆன்ட்ரூஸ்மேல்நிலைப் பள்ளி, சிந்தாதிரிப் பேட்டை தனக்கோட்டி பள்ளி, அயனாவரம் தாராப்பூர் பள்ளி, பெனடிக்ட் பள்ளி உட்பட 9பள்ளிகளுக்கு இதே போல வெடிகுண்டு மிரட்டல் வந்தது.இதனால் இந்தப் பள்ளிகளில் பெரும் பீதி ஏற்பட்டது. இது குறித்து கேள்விப்பட்டது பெற்றோர்கள் பதட்டமடைந்து பள்ளிக்குவந்து தங்களது குழந்தைகளை அழைத்துச் சென்றனர்.
சென்னையில் இன்று ஒரே நாளில் 10 பள்ளிக்கு வந்த வெடிகுண்டு மிரட்டலால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. போனில் மிரட்டல்விடுத்த நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications