ஆளுனரின் சுதந்திர தின விருந்து: திமுக கூட்டணி, ஜெ. புறக்கணிப்பு
சென்னை:
சுதந்திர தினத்தையொட்டி ஆளுனர் பர்னாலா அளித்த வரவேற்பு விருந்து நிகழ்ச்சியை திமுக மற்றும் அதன் கூட்டணிக்கட்சிகள் புறக்கணித்தன.
சுதந்திர தினத்தையொட்டி ஆளுநர் மாளிகையில், அரசியல் கட்சிகள், முக்கியப் பிரமுகர்களுக்காக தேநீர் விருந்துஅளிக்கப்பட்டது. பர்னாலாவும், அவரது மனைவி சுர்ஜித் கவுரும் இந்த விருந்தை அளித்தனர்.இந் நிகழ்ச்சியில் சபாநாயகர் காளிமுத்து, முன்னாள் ஒரிஸ்ஸா மாநில ஆளுனர் எம்.எம்.ராஜேந்திரன், அமைச்சர்கள்பொன்னையன், ஓ.பன்னீர் செல்வம், தளவாய் சுந்தரம், தலைமைச் செயலாளர் நாராயணன், டிஜிபி அலெக்சாண்டர், சென்னைமாநகர காவல்துறை ஆணையர் நடராஜ், ஆற்காடு இளவரசர் நவாப் அப்துல் அலி, சென்னை துணை மேயர் கராத்தேதியாகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த தேநீர் விருந்து நிகழ்ச்சியை திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் முற்றிலுமாக புறக்கணித்தனர்.காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களும் வரவில்லை.
அதேபோல முதல்வர் ஜெயலலிதா வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அவரும் வரவில்லை.
பர்னாலாவை தமிழகத்துக்கு ஆளுநராகக் கொண்டு வந்த திமுக இப்போது அவர் மீது ஆத்திரத்தில் இருக்கிறது என்பதுகுறிப்பிடத்தக்கது. வாக்காளர் பட்டியல் முறைகேடுகள் உள்பட பல்வேறு விஷயங்களில் ஜெயலலிதா அரசை அவர்கண்டிக்கவில்லை என்ற கோபத்தில் திமுக கூட்டணி உள்ளது.












Click it and Unblock the Notifications