ஜெ.வின் உழவர் பாதுகாப்பு திட்டம்: திமுகவின் திட்டம் உல்டாவா?

Subscribe to Oneindia Tamil

சென்னை:

முதல்வர் ஜெயலலிதா சுதந்திர தின உரையின்போது அறிவித்த உழவர் பாதுகாப்புத் திட்டம், திமுகஆட்சிக்காலத்தில் அறிமுகப்படுத்த திட்டம் என்று திமுக விவசாய அணி செயலாளர் கே.பி.ராமலிங்கம்கூறியுள்ளார்.

சென்னை கோட்டையில் நடந்த சுதந்திர தின விழாவின்போது உரையாற்றிய முதல்வர் ஜெயலலிதா, ரூ. 250கோடியில் புதிய உழவர் பாதுகாப்புத் திட்டத்தை அறிவித்தார்.

இத் திட்டம் குறித்து திமுக விவசாய அணி செயலாளர் கே.பி.ராமலிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுகஆட்சியில் விவசாயத் தொழிலாளர் நல வாரியம் என்ற திட்டம் அறிவிக்கப்பட்டது. அந்தத் திட்டத்தை ரத்துசெய்து விட்டுத்தான், அதேபோன்ற உழவர் பாதுகாப்புத் திட்டத்தை ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட நல வாரியத் திட்டத்தில் விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்குவது குறித்துகுறிப்பிடப்படவில்லை. ஜெயலலிதா அறிவித்துள்ள திட்டத்தில் அது மட்டுமே புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.

எனவே கடந்த 2000மாவது ஆண்டிலேயே திமுக அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டத்தைத்தான் பெயர்மாற்றி புதிய திட்டமாக கூறியுள்ளார் ஜெயலலிதா.

திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டம் என்பதால் விவசாயத் தொழிலாளர் நல வாரியத் திட்டத்தைஅதிமுக ஆட்சி கடந்த நான்கு ஆண்டுகளாக கிடப்பில் போட்டிருந்தது. இந்தத் திட்டத்திற்கு விவசாயிகளைச்சேர்க்காமல், அவர்களுக்கு உரிய சலுகைகளை வழங்காமல் நிறுத்தி வைத்திருந்தது அதிமுக அரசு.

இப்போது புதிய திட்டம் போல திமுகவின் திட்டத்தை பெயர் மாற்றி அறிவித்துள்ளார் ஜெயலலிதா. இதுகண்டனத்துக்குரியது. ஏற்கனவே திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட உழவர் சந்தைகளை மூடினார்ஜெயலலிதா.

இப்போது திமுகவின் திட்டத்தை பெயர் மாற்றி அறிவித்துள்ளார். அவரது இந்த செயலை விவசாயிகள் மன்னிக்கமாட்டார்கள் என்று கூறியுள்ளார் ராமலிங்கம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+