தீவிரவாதிகளை ஒடுக்க கோவைக்கு புதிய கமாண்டோ படை
கோயம்பத்தூர்:
கோவை மாநகரில் தீவிரவாதிகளின் செயல்பாடுகளை கண்டுபிடித்து ஒடுக்க புதிய கமாண்டோ படைஅமைக்கப்பட்டுள்ளது.
கோவையில் நடந்த தொடர் குண்டு வெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து மாநகர காவல்துறைபலப்படுத்தப்பட்டது. தற்போது கோவை மாநகரில் ஐ.ஜி. அந்தஸ்தில் காவல்துறை ஆணையர் செயல்பட்டுவருகிறார்.தீவிரவாதிகள் மீண்டும் தலை தூக்காமல் இருப்பதற்காக அங்கு காவல்துறை 24 மணி நேரமும் தொடர்ந்து உஷார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் தீவிரவாதிகளின் தாக்குதலைத் தடுக்கவும், தீவிரவாதிகளின் செயல்பாடுகளைக் கண்டுபிடித்துவேரறுக்கவும் புதிய அதி விரைவுப் படையை அமைக்க மாநகர காவல்துறை, மேற்கு மண்டல ஐ.ஜிக்குபரிந்துரைத்தது.
இந்தப் பரிந்துரை டிஜிபிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அதில், ஒரு இன்ஸ்பெக்டர், 1 சப் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 10 பேர் கொண்ட புதிய கமாண்டோ படையைகோவையில் அமைக்க வேண்டும். அவர்களுக்கு ஆயுதப் பயிற்சியும், எந்த விதமான சூழ்நிலைகளையும்சமாளிக்கும் வகையிலான பயிற்சிகளையும், திறன் மேம்பாட்டுப் பயிற்சியும் அளித்து பணியில் ஈடுபடுத்தவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்திற்கு தமிழக அரசின் உள்துறையும் அனுமதி வழங்கிவிட்டது. இதையடுத்து இந்த கமாண்டோபடை விரைவில் உருவாக்கப்படவுள்ளது.
இந்தப் படையில் இடம் பெறுவோருக்கு சென்னை ஆவடியில் உள்ள தமிழ்நாடு கமாண்டோ படை பயிற்சிமையத்தில் தீவிர பயிற்சி அளிக்கப்படும். இந்தப் படையில் வீரப்பனைப் பிடிக்க நியமிக்கப்பட்ட சிறப்புஅதிரடிப்படையில் இடம் பெற்றிருந்தவர்கள் இடம் பெறக் கூடும் என்று தெரிகிறது.
கமாண்டோ படையின் தலைவராக சென்னை மாநகர தலைமையக துணை ஆணையர் கருப்புசாமிநியமிக்கப்பட்டுள்ளார். இவர் வீரப்பனை ஒழித்துக் கட்டிய சிறப்பு அதிரடிப்படையில் பல காலம் பணியாற்றியவர்ஆவார்.
பதட்டமான நேரங்களில் கமாண்டோ படை பணியில் முழுமையாக ஈடுபடுத்தப்படும். இப்படையில் கூடுதலாகவீரர்களை பின்னர் நியமிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை மாநகர காவல்துறை ஆணையர் கரன் சின்ஹாவுக்கு நெருக்கமான வட்டாரங்கள் இந்தத் தகவலைத்தெரிவித்தன.












Click it and Unblock the Notifications