தமிழக ஆட்டோக்களில் விரைவில் டிஜிட்டல் மீட்டர்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் ஆட்டோக்களில் தில்லு முல்லு செய்யும் டிரைவர்களைத் தடுக்க, டிஜிட்டல் மீட்டர்களை அறிமுகம் செய்ய அரசுமுடிவு செய்துள்ளது.
அதே போல டெல்லி, பெங்களூரைப் போல இயற்கை எரிவாயுவில் இயங்கும் ஆட்டோக்களை சென்னையிலும்அறிமுகப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.சென்னையில் இப்போது 500 ஆட்டோக்கள் எல்.பி.ஜி. கேஸ் மூலம் இயங்கி வருகின்றன. இதனை எல்லா ஆட்டோக்களுக்கும்கட்டாயமாக்கி சுற்றுச் சூழல் மாசுபடுவதைத் தடுக்கலாம் என அரசு கருதுகிறது.
ஆட்டோக்களுக்கு டிஜிட்டல் மீட்டர் போடச் சொல்வது எல்லாம் சரி தான். ஆனால், மீட்டரே போடாத ஆட்டோ டிரைவர்கள்,மீட்டரே இல்லாத ஆட்டோக்களை என்ன செய்யப் போகிறார்களோ தெரியவில்லை.
மதுரை போன்ற ஊர்களில் மீட்டர் என்ற கான்சப்டே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. "ங்கு யூனிபார்ம் கூட போடாமல், கைலிகட்டிக் கொண்டு, பான்பராக்கை துப்பிக் கொண்டே டிரைவர் கேட்பது தான் வாடகை.












Click it and Unblock the Notifications