பெங்களூர் போக்குவரத்து நெரிசல்: பிரதருக்கு தயாநிதி மாறன் கடிதம்
பெங்களூர்:
பெங்களூர் நகரில் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ. 500 கோடி சிறப்பு நிதியை ஒதுக்க வேண்டும் எனபிரதமர் மன்மோகன் சிங்குக்கு மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் தயாநிதி மாறன் கோரிக்கைவிடுத்துள்ளார்.
இது தொடர்பாக மாறன் கொடுத்துள்ள கடிதத்தில்,தகவல் தொழில்நுட்ப நகரமான பெங்களூரில் இருந்து மட்டும் கடந்த ஆண்டில் ரூ. 27,000 கோடிக்கு சாப்ட்வேர் ஏற்றுமதிஆகியுள்ளது. ஏராளமான பன்னாட்டு நிறுவனங்கள் பெங்களூரை நோக்கி படையெடுத்து வருகின்றன.
இதனால் அந் நகரில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது. வளர்ந்து வரும் போக்குவரத்தைக் கையாள அந் நகரில்போதுமான அடிப்படை கட்டமைப்பு வசதியில்லை. இதனால் பல நிறுவனங்கள் வேறு மாநிலத்துக்கு இடம் பெயரப் போவதாகக்கூறி வருகின்றன.
இதை பிரதமர் கவனத்தில் கொள்ள வேண்டும். பெங்களூரில் போக்குவரத்து மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதியைப்பெருக்க அந் நகருக்கு ரூ. 500 கோடியை சிறப்பு நிதியாக ஒதுக்க வேண்டும்.
போக்குவரத்து நெரிசல் என்பது பெங்களூர் நகரில் அன்றாட முக்கிய நிகழ்ச்சியாகிவிட்டது. அதை சரி செய்ய அங்கு 50மேம்பாலங்கள் கட்டப்பட வேண்டும். அந்தப் பணிகள் வேகமாக நடந்து முடிய வேண்டும்.
இதனால் அவசரமாக ரூ. 500 கோடியை பெங்களூருக்கு ஒதுக்கித் தந்து தகவல் தொழில்நுட்பத்துறையில்பணியாற்றுவோருக்கும், இந்தத் துறையின் வளர்சிக்கும் பிரதமர் உதவ வேண்டும் என்று கோரியுள்ளார் தயாநிதி மாறன்.