For Daily Alerts
Just In
வங்கதேசத்தில் 61 இடங்களில் அடுத்தடுத்து குண்டு வெடிப்பு
டாக்கா:
வங்க தேசத்தின் இன்று ஒரே நேரத்தில் 61 இடங்களில் 400க்கும் மேற்பட்ட குண்டுகள் வெடித்தன. இதில் நூற்றுக்கும்அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.
தலைநகர் டாக்கா, தென் மேற்கு நகரான குலானா, வட கிழக்கு நகரான சில்ஹட், முஷின்கன்ஞ் ஆகிய பகுதிகளில் 49க்கும்அதிகமான இடங்களில் ஒரே நேரத்தில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. டாக்காவின் சர்வதேச ஜியா விமான நிலையம்,அரசு அலுவலகங்கள், நீதிமன்றங்கள், பிரஸ் கிளப்களில் இந்த குண்டுகள் வெடித்தன.அந் நாட்டின் 64 மாவட்டங்களில் 61ல் குண்டுகள் வெடித்தன.
காலை 11 மணி முதல் 11.30 வரை நடந்த இந்த தொடர் குண்டு வெடிப்புகளால் வங்கதேசத்தில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.
தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கமான ஜமாயத்துல் முஜாகிதீனின் பங்களா பாய் பிரிவு தான் இந்த குண்டுவெடிப்புகளைநடத்தியதாகத் தெரிகிறது. இது தொடர்பாக 45 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாட்டில் இஸ்லாமிய சட்டத்தை அமலாக்க வேண்டும் என இந்த அமைப்பு கோரிக்கை விடுத்து வருகிறது.
Comments
Story first published: Wednesday, August 17, 2005, 5:30 [IST]