வெனிசுவேலா விமான விபத்தில் 160 பேர் பலி
காரகஸ்:
வெனிசுவேலாவில் விமானம் கீழே விழுந்து வெடித்துச் சிதறியதில் 160 பேர் பலியாயினர்.
தென் அமெரிக்க நாடான பனாமாவில் இருந்து பிரஞ்சு கரீபியன் தீவான மார்டினிக் தீவுக்கு அந்த விமானம் சென்றுகொண்டிருந்தது. மெக்டோனல் டக்ளஸ்-82 ரகத்தைச் சேர்ந்த அந்த விமானம் பறந்து கொண்டிருந்தபோது இரண்டுஎன்ஜின்களில் கோளாறு ஏற்பட்டது.இதையடுத்து விமானத்தை அவசரமாகத் தரையிறக்க விமானி அனுமதி கோரினார். ஆனால், அடுத்த பத்தாவது நிமிடத்தில்அந்த விமானம் தரையில் விழுந்து நொறுங்கிவிட்டது.
கொலம்பியா எல்லைக்கு அருகே இந்த விபத்து நடந்தது. இதில் விமானத்தில் இருந்து 160 பேரும் பலியாகிவிட்டனர்.விமானத்தின் சிதறிய பாகங்களும் உடல்களும் கொலம்பியா மற்றும் வெனிசுவேலா எல்லைப் பகுதியில் பல கி.மீ. தூரத்தில்சிதறிக் கிடக்கின்றன.
பலியான அனைவருமே பிரஞ்சு நாட்டவர் ஆவர்.
கடந்த ஒரு வாரத்தில் நடந்துள்ள இரண்டாவது மிகப் பெரிய விமான விபத்து இதுவாகும். கிரீஸ் நாட்டின் விமானம் சிலநாட்களுக்கு முன் திடீரென வெடித்துச் சிதறி அதிலிருந்த நூற்றுக்கும் அதிகமான பயணிகள் பலியாயினர்.
அந்த விமானத்தின் ஏர்-கண்டிசனிங் சிஸ்டத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக விஷ வாயு பரவி விமானிகள் மயங்கியதால்விமானம் விபத்துக்குள்ளானதாகக் கூறப்படுகிறது.