இமயத்தில் ஏற்றப்படும் வள்ளலார் ஜோதி: ரஜினி பங்கேற்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

இமயமலைத் தொடரில் உள்ள தாரகாவனம் மலைக்குன்றில் வரும் 21ம் தேதி நடைபெறும் வள்ளலார் ஜோதி ஏற்றும் விழாவில்நடிகர் ரஜினிகாந்த்தும் கலந்து கொள்கிறார்.

வள்ளலார் என்று அன்புடன் அழைக்கப்பட்ட ராமலிங்கம் சுவாமிகள் அவதரித்த கடலூர் மாவட்டம் வடலூரில் அவர் நிறுவியசத்யஞான சபை ஆசிரமத்தில் வள்ளலார் ஜோதி நீண்ட நெடுங்காலமாக அணையாமல் இருந்து வருகிறது. இதைஅருட்பெருஞ்சோதி என்று பக்தர்கள் வழிபடுகிறார்கள்.

இதேபோன்ற ஒரு ஜோதியை இமயமலைத் தொடரில் உள்ள தாரகாவனம் என்ற மலைக் குன்றில் வரும் 21ம் தேதிஏற்றப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை சுவாமி ஞானானந்தா தலைமையிலான குழுவினர் செய்துள்ளனர்.

இதற்காக 150 பக்தர்கள் ரயில் மூலம் கிளம்பிச் சென்றுள்ளனர். அவர்களை ரஜினிகாந்த் ரசிகர் மன்றத் தலைவர் சத்யநாராயணாசந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

இந்த விழாவில் ரஜினியும் கலந்து கொள்கிறார். 21ம் தேதி ஏற்றப்படும் ஜோதி விழாவில் பங்கேற்று ரஜினியும் வள்ளலார்ஜோதியை ஏற்றி வைக்கிறார்.

இந்த யாத்திரையில் பங்கேற்கும் பக்தர்கள், பத்ரிநாத், ஜோதிர்மட், கேதாரநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி, ரிஷிகேஷ்,ஹரித்வார் உள்ளிட்ட தலங்களுக்கும் யாத்திரை மேற்கொள்கின்றனர். அதன் பின்னர் செப்டம்பர் 9ம் தேதி வடலூர்திரும்புகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+