பையில பணம்.. வகுப்பில் இடம்- ராமதாஸ் காட்டம்
சென்னை:
எந்த விதமான விதிகளையும் பின்பற்றாமல் கையில காசு, வாயில் தோசை மாதிரி காசை வாங்கிக் கொண்டு சீட்களை கூவிக்கூவி விற்கும் தனியார் கல்வி நிறுவனங்கள் குறித்து விசாரிக்க உயர் மட்டக் குழு அமைக்க வேண்டும் என பாமக நிறுவனர்டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இதை வலியுறுத்தி வரும் 19ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாகவும் அறிவித்துள்ளார். இது தொடர்பாக ராமதாஸ்வெளியிட்டுள்ள அறிக்கையில்,சுய நிதி பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகளுக்கு முழு அதிகாரம் வழங்கி அவை தன்னிச்சையாக செயல்பட உச்சநீதிமன்றத்தின் சமீபத்தில் தீர்ப்பு வழி வகுத்துள்ளது. இந்தக் கல்லூரிகளை நடத்துபவர்கள் உண்மையிலேயே அற நோக்குடன்தான் நடத்துகிறார்களா? இவர்களது கட்டணக் கொள்ளையும் கட்டாய நன்கொடை கொள்ளையும் ஊரறிந்தது.
சுய நிதி கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கப்படுவதில்லை. அங்கு இடங்கள் விற்கப்படுகின்றன. இது நாடறிந்த ரகசியம்.கையில காசு.. வாயில தோசை மாதிரி பையிலே பணம், வகுப்பிலே இடம் என்பது தான் இந்தக் கல்லூரிகளில் எழுதப்படாதசட்டம்.
நன்கொடை வசூலிக்கக் கூடாது.. வாங்கினால் தண்டிக்கப்படுவீர் என்று ஆண்டுதோறும் அறிவிப்பும் வெளியாகிக் கொண்டுதான் உள்ளது. இதை யாரும் மதித்ததும் இல்லை. தவறு செய்தவர்கள் மீது சட்டம் பாய்ந்ததும் இல்லை.
பல கல்லூரிகள் அரசுக்குச் சொந்தமான நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலத்தை வளைத்துப் போட்டுள்ளன. இது யார் சொத்து.பொதுச் சொத்து தானே. பொதுச் சொத்து எப்படி தனியார் கல்லூரிகளுக்கு சொந்தமானது?
இந்தக் கல்லூரிகளுக்கு நூற்றுக்கணக்கான பஸ்கள் உள்ளன. அதில் தான் மாணவர்கள் வந்து செல்ல வேண்டும் என்றுகட்டாயப்படுத்தி கொள்ளை அடிக்கிறார்கள். இந்த வாகனங்களுக்கு அரசு வரி விதிக்கிறதா?
இந்தக் கல்லூரிகளில் நடக்கும் முறைகேடுகள் கொஞ்ச நஞ்சமல்ல. ஏராளமானவை. அவற்றைக் கண்டுபிடித்து தவறுகளைக்களைய உயர் மட்டக் குழுவை அசு நியமிக்க வேண்டும்.
இட ஒதுக்கீடு என்ற சமூகக் கடமையை அமலாக்க மாட்டோம் என்று அடம்பிடிக்கும் இந்தக் கல்விக் கொள்ளையர்கள் அரசின்பொதுச் சொத்தை, நிலத்தை வளைத்துப் போட்டு அனுபவிக்க எந்த உரிமையும் இல்லாதவர்கள் என்று கூறியுள்ளார் ராமதாஸ்.