தனியார் துறையில் இட ஒதுக்கீடு: கருணாநிதிக்கு சோனியா கடிதம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தனியார் துறையில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவது மற்றும் பிற்பட்டோர் நலன்களுக்கான நாடாளுமன்றக் குழுவைஅமைப்பது ஆகியவை தொடர்பாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மத்திய தேசிய ஆலோசனைக் குழுத் தலைவரும்காங்கிரஸ் தலைவருமான சோனியா காந்தி, திமுக தலைவர் கருணாநிதிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
தனியார் துறையிலும் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும், பிற்பட்டோர் நலன்களுக்கான நாடாளுமன்றக் கூட்டுக்குழுவை அமைக்க வேண்டும் என்று கோரி பிரதமர் மன்மோகன் சிங், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் மத்தியஅரசின் தேசிய ஆலோசனைக் குழுத் தலைவருமான சோனியா காந்தி ஆகியோருக்கு கருணாநிதி சமீபத்தில் கடிதம்எழுதியிருந்தார்.இதற்கு சோனியா காந்தி பதில் தெரிவித்து கருணாநிதிக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதில், பிற்பட்டோர் நலன்களுக்கானநாடாளுமன்றக் குழுவை அமைப்பது தொடர்பாக தீவிரமாக பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
தனியார் துறையில் வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு அளிப்பது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்களுக்குதெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான ஆலோசனைகளும் துவங்கிவிட்டன என சோனியா காந்தி தனது கடிதத்தில்கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications