தமிழர் விடுதலை படை தலைவர் செந்தில் கைது
Subscribe to Oneindia Tamil
விருதாச்சலம்:
நக்சலைட் அமைப்பான தமிழர் விடுதலைப் படையின் தலைவராக செயல்பட்டு வந்த செந்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
தடை செய்யப்பட்ட நக்சலைட் அமைப்பான தமிழர் விடுதலைப் படையின் தலைவரான சுப. இளவரசன் கைது செய்யப்பட்டுசிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதையடுத்து தமிழர் விடுதலைப் படையின் தலைவராக செந்தில் செயல்பட்டு வந்தார்.பல்வேறு கொலை, கொள்ளை வழக்குகள் இவர் மீது நிலுவையில் உள்ளன.கடலூர் போலீஸார் செந்திலை தீவிரமாக தேடி வந்தனர். இந் நிலையில் விருதாச்சலத்தில் வைத்து செந்தில் பிடிபட்டார்.போலீஸார் நடத்திய தேடுதல் வேட்டையின்போது அவர் சிக்கினார். அவரிடமிருந்து 2 கையெறி வெடிகுண்டுகள்,வீச்சரிவாள்கள் ஆகியவற்றையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.
விருதாச்சலத்தில் வைத்து செந்திலிடம் விடிய விடிய விசாரணை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து இன்று அவரைநீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவலில் எடுக்க போலீஸார் முடிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications