மக்களவையில் செம்மொழியில் பேசிய பாலு
டெல்லி:
மத்திய கப்பல் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் டி.ஆர்.பாலு, மக்களவையில் நடந்த விவாதத்தின்போது ஒரு கேள்விக்குதமிழிலேயே பதிலளித்தார்.
மக்களவையில் சேது சமுத்திரத் திட்டம் தொடர்பாக விவாதம் நடந்தது. அப்போது மதிமுக உறுப்பினர் சிப்பிப்பாறைரவிச்சந்திரன் (சிவகாசி), இத்திட்டம் தொடர்பாக மீனவர்களிடையே நிலவும் அச்ச உணர்வு குறித்து கேள்வி எழுப்பினார்.இதற்கு டி.ஆர்.பாலுவும் தமிழிலேயே பதிலளித்தார். மக்களவை சபாநாயகரின் முன் அனுமதியைப் பெற்று அவர் தமிழில்பதிலளிக்கையில், சேது சமுத்திரம் திட்டத்தால் மீனவர்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது.
மீனவர்களைப் பாதுகாக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கும். அவர்களுக்குரிய சலுகைகள் கட்டாயம்கொடுக்கப்படும். எனவே அச்ச உணர்வு தேவையற்றது என்றார்.
பின்னர் நாடாளுமன்றத்திற்கு வெளியே டி.ஆர்.பாலு தமிழகத்தைச் சேர்ந்த செய்தியாளர்களிடம் பேசுகையில், ஒரு மத்தியஅமைச்சர், மக்களவையில் தமிழிலேயே பதிலளித்தது இதுவே முதல் முறை என்று நினைக்கிறேன்.
அதுவும் மறைந்த முரசொலி மாறனின் 71வது பிறந்த நாள் நிகழ்வின்போது மக்களவையில் தமிழில் பேசியதை பெருமையாககருதுகிறேன் என்றார்.