ரூ. 7 லட்சம் சீன் புத்தகங்கள் பறிமுதல்; 2 பேர் கைது!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை ராயப்பேட்டையில், ஆபாச புத்தகங்களை அச்சிட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்துரூ. 7 லட்சம் மதிப்புள்ள 25,000 ஆபாசப் புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ராயப்பேட்டையில் உள்ள ஒரு கட்டடத்தில், ரகசியமாக ஆபாசப் புத்தகங்கள் அச்சிடப்பட்டு விற்பனைசெய்யப்படுவதாக போலீஸாருக்குத் தகவல் வந்தது. இதையடுத்து இணை ஆணையர் உமா கணபதி சாஸ்திரிதலைமையில் போலீஸ் படை அங்கு விரைந்தது.சம்பந்தப்பட்ட கட்டடத்தை முற்றுகையிட்ட போலீஸார் அங்கு சோதனை நடத்தினர். அப்போது தெலுங்குமொழியில் அச்சிடப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான ஆபாசப் புத்தகங்கள் அங்கு இருந்தன.
மொத்தம் ரூ. 7 லட்சம் மதிப்பிலான 25,000 புத்தகங்கள் விற்பனைக்குத் தயார் நிலையில் கட்டிவைக்கப்பட்டிருந்தன. அவற்றைப் போலீஸார் பறிமுதல் செய்தனர்.
அச்சக உரிமையாளர் உள்ளிட்ட 2 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்களில் ஒருவர் ஆந்திர மாநிலத்தைச்சேர்ந்தவர்.
இந்தப் புத்தகங்களை சென்னையில் அச்சிட்டு ஆந்திராவில் விற்பனை செய்து வந்துள்ளனர். சென்னையிலும்இவற்றை புழக்கத்தில் விட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications