மீனவர்கள் மீது கடற்படைத் வெறி தாக்குதல்!
வேளாங்கண்ணி:
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது கடற்படை வீரர்கள்வெறித் தாக்குதல் நடத்தி, மீனவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்கள் மற்றும் 20 லிட்டர் டீசலை பறித்துச் சென்றனர்.
இவர்கள் இந்தியக் கடற்படையினரா அல்லது இலங்கைக் கடற்படையினரா என்று தெரியவில்லை.வேளாங்கண்ணி அருகே உள்ள செருதூர் கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் குப்புராஜ், அனந்தகுமார் ஆகிய இரு மீனவர்களும்மீன் பிடிப்பதற்காக சென்றனர். கோடியக்கரை அருகே நடுக் கடலில் அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, ஒருஇயந்திரப் படகில் கடற்படை வீரர்கள் வந்தனர்.
மீனவர்களை சுற்றி வளைத்த அவர்கள் இரு மீனவர்களையும் திடீரென தாக்க ஆரம்பித்தனர். பின்னர் அவர்கள் பிடித்துவைத்திருந்த மீன்கள் மற்றும் 20 லிட்டர் டீசல் ஆகியவற்றை பறித்துக் கொண்டு சென்று விட்டனர்.
படுகாயம் அடைந்த இரு மாணவர்களும் தத்தித் தடுமாறி கரைக்கு வந்து சேர்ந்தனர். பின்னர் அவர்களை மற்ற மீனவர்கள்நாகை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சேர்த்தனர். இதுதொடர்பாக கீழையூர் காவல் நிலையம் மற்றும்மீன்வளத்துறை அதிகாரிகளிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
தாக்குதல் நடத்தியவர்கள் இந்திய கடற்படையைச் சேர்ந்தவர்களா அல்லது இலங்கை கடற்படையினரா என்பது அந்தமீனவர்களுக்குத் தெளிவாகத் தெரியவில்லை.
இச் சம்பவம் குறித்து போலீஸாரும், மீனவளத்துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications