அவசரமாய் தரையிங்கிய ஜெட் ஏர்வேஸ் விமானம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
டெல்லியில் இருந்து பெங்களூர் கிளம்பிய ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் பறவை மோதியதையடுத்து அந்த விமானம் அவசரமாகமீண்டும் டெல்லி விமான நிலையத்திலேயே தரையிறங்கியது.
டெல்லி விமான நிலையத்தில் இருந்து 101 பயணிகளுடன் அந்த ஜெட் ஏர்வேஸ் நிறுவன விமானம் இன்று காலை 10.15மணிக்கு பெங்களூர் புறப்பட்டது. டேக்-ஆப் செய்யப்பட்ட அடுத்த சில நிமிடங்களிலேயே விமானத்தின் என்ஜினில் பறவைமோதியது.இதையடுத்து டெல்லி சர்வதேச விமான நிலைத்திலேயே மீண்டும் விமானத்தை அவசரமாக இறக்க விமானிகள் அனுமதிகோரினர். இதைத் தொடர்ந்து எமெர்ஜென்சி லேண்டிங்குக்கு விமான நிலையம் தயார் ஆனது.
ஆம்புலன்ஸ்கள், தீயணைப்பு வண்டிகள் ஆகியவை தயார் நிலையில் வைக்கப்பட்டது. மிகவும் பரபரப்பான சூழலில் 10.40மணிக்கு அந்த விமானம் பத்திரமாகத் தரையிறங்கியது.
இதையடுத்து அதிலிருந்த பயணிகள் இன்னொரு விமானத்தில் பெங்களூர் அனுப்பட்டனர்.












Click it and Unblock the Notifications