ஜெ ஜோதிடர், ஜெயேந்திரர் வழக்குகள் மாற்றம்
சென்னை:
நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி கோவிலில் சிவன் சன்னதி இடிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக மதுரை உயர்நீதிமன்றக்கிளையில் பதிவாகியுள்ள 4 வழக்குகளையும் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றி தலைமை நீதிபதி தலைமையிலானடிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.
திருக்குறுங்குடி கோவிலில் இருந்த சிவன் சன்னதியை ஜெயலலிதாவின் ஆஸ்தான ஜோதிடர் உண்ணிகிருஷ்ண பணிக்கரின்ஆலோசனையின்படியும், ஜெயேந்திரர் உத்தரவின் பேரிலும் கோவில் நிர்வாகம் இடித்துத் தள்ளியது. இதுதொடர்பாக திவ்யதேசமக்கள் சபையின் சார்பில் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.இந்த வழக்கில் ஜெயேந்திரர், உண்ணி உள்ளிட்டோர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். திருக்குறுங்குடி விவகாரம்தொடர்பாக மொத்தம் 4 வழக்குகள் மதுரை கிளையில் நிலுவையில் உள்ளன.
இந் நிலையில் ஜெயேந்திரர் உள்ளிட்டோர் மீதான புகார்களை போலீஸார் சரிவர விசாரிக்கவில்லை என்று கூறி திவ்யதேசமக்கள் சபை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.
(இந்த விவகாரத்தில் ஜெயேந்திரரை விசாரித்தால் உண்ணியையும் விசாரிக்க வேண்டும் என்பதால் போலீஸார் இவ்வாறுநடந்து கொண்டதாகத் தெரிகிறது)
இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.டி.தினகரன், ஜெயேந்திரர் உள்ளிட்டோர் மீதான புகார்களைப் பதிவு செய்து விசாரிக்குமாறுதமிழக அரசுக்கு உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து ஜெயேந்திரர் உள்ளிட்டோர் உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடுசெய்து மதுரை கிளையில் வழக்குகளை விசாரிக்க இடைக்காலத் தடை வாங்கினர்.
இந் நிலையில், திவ்யதேச மக்கள் சபை சார்பில் மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில்,தடையை நீக்குமாறு கோரி முறையிடப்பட்டது. இந்த மனு தலைமை நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு, நீதிபதி குலேசகரன்ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது மதுரை கிளையில் நிலுவையில் உள்ள 4 வழக்குகளையும் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்ற நீதிபதிகள்உத்தரவிட்டனர். மேலும் வழக்கு விசாரணை வருகிற 25ம் தேதி நடைபெறும் எனவும் அறிவித்தனர்.












Click it and Unblock the Notifications