இலங்கை: இந்தியாவின் பங்கு முக்கியம்- ரணில்
டெல்லி:
இந்த அமைதி முயற்சிகளில் இந்தியா மிக முக்கிய பங்காற்றியே ஆக வேண்டும் என இலங்கை எதிர்க் கட்சித் தலைவரும்முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கே கூறினார்.
இலங்கை அமைதி முயற்சிகள் குறித்த டெல்லியில் நடந்த 8வது தினேஷ் சிங் நினைவு உரையாற்றிய விக்கிரமசிங்கேகூறியதாவது:இலங்கை இனப் பிரச்சனைக்குத் தீர்வு ஏற்பட இந்தியாவின் பங்கு மிக மிக அவசியம்.
இப்போது இலங்கையை ஆளும் கட்சிக்கு பெரும்பான்மை பலமே இல்லை. இதனால் அவர்களால் அமைதிப்பேச்சுவார்த்தையை முன்னெடுத்துச் செல்ல முடியவில்லை. மக்களின் முழு ஆதரவைப் பெற்ற, புதிய, நிலையான அரசு தான்பேச்சுவார்த்தைகளை நடத்த முடியும்.
எக்காரணத்தைக் கொண்டும் இலங்கை பிரிவினையை ஏற்க முடியாது. இந்தியாவைப் போல சுயாட்சி கொண்ட மாகாண(மாநில) அரசுகளை அமைப்பதே பிரச்சனைக்குத் தீர்வு காண சரியான வழி.
விடுதலைப் புலிகளுடனான எங்களது முந்தைய அனுபவத்தை வைத்துத் தான் அரசியல்ரீதியில் பிரச்சனைக்குத் தீர்வு காணமுயன்றோம். இனப் பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண நாங்கள் எடுத்த முந்தைய முயற்சிகள் பலனளிக்கவில்லை.நாங்கள் எல்லோருமே தவறுகள் செய்தது அதற்குக் காரணமாக இருக்கலாம்.
வழக்கமான தீர்வுகளை வைத்துக் கொண்டு இந்தப் பிரச்சனையை அணுகக் கூடாது. புதிய வகையான அணுகுமுறைகள் மூலமேசிக்கலைத் தீர்க்க முடியும். இந்த அமைதி முயற்சிகளில் இந்தியா மிக முக்கிய பங்காற்றியே ஆக வேண்டும்.
புலிகளுடனான அதிகாரப் பகிர்வு குறித்த அறிக்கையை தயார் செய்ய இந்தியா தந்த யோசனைகள் மிகச் சிறப்பானவை. அமைதிமுயற்சிகள், பேச்சுவார்த்தைகள் செல்லும் திசை குறித்து இந்தியாவிடம் அவ்வப்போது விவரங்களை அளித்தே வந்தோம்.
பேச்சுவார்த்தைகள் நீடிக்க வேண்டும் என்பதில் இந்தியா தீவிரமாக இருந்தது. இந்தியா தங்களுக்கு எதிரான ஒரு நாடு என்றகருத்து இலங்கை ஆட்சியாளர்களிடம் நீண்டகாலமாகவே இருந்து வருகிறது. இது உண்மையல்ல.
இந்தியாவின் மிக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரத்துடன் இணைந்து செயல்படுவது தான் இலங்கையின்பொருளாதாரத்துக்கும் நல்லது. அதே நேரத்தில் இலங்கையின் தனித்தன்மையும், அரசியல் சுதந்திரமும் பாதுகாக்கப்படவேண்டும்.
இந்திய-இலங்கை நல்லுறவு மற்ற இரு நாடுகளுக்கு ஒரு முன்னுதாரமான உறவாகும் வகையில் வளர வேண்டும் என்றார் ரணில்.