டெல்லி: தயாநிதி மாறன் வீட்டில் பயங்கரம்- சக காவலரை சுட்டுக் கொன்ற காவலர்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

டெல்லியில் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனின் வீட்டில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த மத்தியப் படையைச் சேர்ந்த வீரர்ஒருவர் தனது சக வீரரை சுட்டுக் கொன்றார்.

தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் தயாநிதி மாறனின் வீடு டெல்லி அக்பர் ரோட்டில் (எண்-6) உள்ளது. இங்கு மத்தியரிசர்வ் படையைச் சேர்ந்த வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தப் படையின் தலைமைக் காவலர் சுரேஷ் டோக்ரா. அவருக்குக் கீழ் பணி புரிபவர் காவலர் கணேஷ். இதில் சுரேசின்செயல்பாடுகள் குறித்து துறைரீதியிலான விசாரணை நடந்து வருகிறது. இந்த விசாரணையில் கணேசும் ஒரு சாட்சியாகவிசாரிக்கப்பட்டு வந்தார்.

இந் நிலையில் இன்று மாறனின் வீட்டு வாசலில் காவல் காக்கும் பணியை முடித்துவிட்டு கணேஷ் காலை 7.30 மணிக்கு கார்ட்ரூமுக்குத் திரும்பினார். அப்போது அங்கிருந்த சுரேசுக்கும் கணேசுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

வாக்குவாதம் வலுத்ததையடுத்து கோபமடைந்த கணேஷ் தனது துப்பாக்கியால் தனது தலைமைக் காவலர் சுரேஷை சுட்டார்.இதில் சம்பவ இடத்திலேயே சுரேஷ் பலியானார்.

மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த கணேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். பலியான சுரேசின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

டெல்லியின் மிக முக்கிய விவிஐபிக்கள் தங்கியுள்ள உயர் மட்டப் பாதுகாப்பு மிகுந்த அக்பர் ரோட்டில் நடந்துள்ள இச் சம்பவம்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+