சுயநிதி கல்லூரிகள் பெறும் சலுகைகள்: ராமதாஸ்
திண்டிவனம்:
தமிழகத்தில் தனியார் சுய நிதி பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகள் பெற்று வரும் சலுகைகளைமுழுமையாக அறிக்கையாக வெளியிட்டு மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்று பாமக நிறுவனர்ராமதாஸ் கோரியுள்ளார்.
திண்டிவனத்தை அடுத்த தைலாபுரத்தில் தனது வீட்டில் செய்தியாளர்களிடம் ராமதாஸ் பேசுகையில், தமிழகத்தில்உள்ள தனியார் சுய நிதி பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகள் தமிழக அரசிடமிருந்து பல்வேறுசலுகைகளைப் பெற்று அனுபவித்து வருகின்றன.மின் கட்டணம் உள்பட பல்வேறு சலுகைகள் இவற்றிற்கு வழங்கப்படுகின்றன. இந்த சலுகைகள் குறித்துமக்களுக்குத் தெரியாது. அவற்றை மக்களுக்குத் தெரியப்படுத்தும் வகையில், தமிழக அரசு உண்மைஅறிக்கையை, அதாவது என்னென்ன சலுகைகளை இக்கல்லூரிகள் பெற்று வருகின்றன என்பதை முழுமையானஅறிக்கையாக வெளியிட வேண்டும்.
இக் கோரிக்கையை வலியுறுத்தி எனது தலைமையில், சென்னையில் நிநளை (வெள்ளிக்கிழமை) தொடர் முழக்கப்போராட்டம் நடத்தப்படும்.
இதேபோல, தமிழகத்தில் உள்ள 16 நிகர் நிலைப் பல்கலைக்கழகங்களிலும் அரசின் இட ஒதுக்கீடு முறையாகஅமல்படுத்தப்படவில்லை. அதையும் சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் ராமதாஸ்.












Click it and Unblock the Notifications