லண்டன்: இந்திய மாணவரை தாக்கியவருக்கு சிறை

Subscribe to Oneindia Tamil

லண்டன்:

இனரீதியில் இந்திய பள்ளி மாணவர்களைத் தாக்கிய இங்கிலாந்து வாலிபருக்கு 16 மாதம் சிறை தண்டனை விதித்து அந் நாட்டுநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

லண்டனில் நூற்றுக்கும் மேற்பட்ட இங்கிலாந்து வாலிபர்கள் சேர்ந்து கொண்டு ஆசியர்களைத் தாக்கி வந்தனர். குறிப்பாகபள்ளிகளின் அருகே விளையாடிக் கொண்டிருக்கும் 11 முதல் 14 வயதான ஆசிய சிறுவர்கள், சிறுமியரை கொடூரமான வகையில்இந்தக் கும்பல் தாக்கி வந்தது.

இதில் காஷ்மீரைச் சேர்ந்த அஸ்கர் அலி என்பவரின் மகனும், மேலும் இரு ஆசிய நாடுகளின் சிறுவர்களும் மயங்கி விழும்அளவுக்கு தாக்கப்பட்டனர். உருட்டுக் கட்டைகளால் முகத்திலும் கொடூரமாக இவர்கள் தாக்கப்பட்டனர்.

இதையடுத்து அந்த இங்கிலாந்து வாலிபர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆலன் பெர்க்,தாக்குதலுக்கு முக்கிய காரணமாக இருந்த பீட்டர்ஸ் என்ற வாலிபருக்கு 16 மாத சிறை தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார்.

தனது தீர்ப்பில், காட்டில் இரை தேடி அலையும் ஓநாய் மாதிரி ஆசிய சிறுவர்களைத் தேடித் தேடித் கொஞ்சமும் இரக்கமில்லாமல்தாக்கியுள்ளார்கள். ஆசியர்கள் என்ற ஒரே காரணத்துக்காக எந்தத் தவறும் செய்யாத அந்த சிறுவர்கள் தாக்கப்பட்டுள்ளார்கள்என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+