For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஊழல் அதிகாரிகள்: பொது மக்களிடம் இருந்து தகவல் பெற சிபிஐ திட்டம்

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

அரசு அலுவலகங்களில் ஊழலைக் கட்டுப்படுத்த பொது மக்களின் உதவியைப் பெற சிபிஐ முடிவு செய்துள்ளது.

ஊழல் செய்யும் அதிகாரிகள் குறித்த விவரங்களை பொது மக்களிடம் இருந்து இ-மெயில், தொலைபேசி, கடிதங்கள் மூலம்பெறும் புதிய நடைமுறையை அமலாக்க சிபிஐ திட்டமிட்டுள்ளது.

இந்தப் புகாரைக் கொடுப்பவரின் பெயர் வெளியிடப்படாது. வரும் புகார்கள் குறித்து ரகசியமாக விசாரணை நடத்தவுள்ள சிபிஐபுகார் உண்மையானால் ரெய்ட் உள்பட சட்டரீதியிலான நடவடிக்கைகளில் இறங்கும்.

மூன்று ஆண்டுகளுக்கு முன் சிபிஐயின் இயக்குனராக இருந்த பி.சி.சர்மா தான் ஊழல் அதிகாரிகளின் வீடுகளிலும்அலுவலகங்களிலும் ரெய்ட் நடத்தும் புதிய முறையை அறிமுகப்படுத்தினார்.

அவரது பதவிக் காலத்தில் நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் பொதுத்துறை அதிகாரிகள் சிக்கினர்.ஊழலைக் கட்டுப்படுத்த பொது மக்களிடம் இருந்து புகார்கள் வாங்கலாம் என்ற யோசனையையும் அவர் முன் வைத்தார்.

இப்போது அவரது யோசனைக்கு வடிவம் கொடுக்கும் முயற்சிகளில் சிபிஐ இறங்கியுள்ளது.

இதற்கிடையே நாட்டில் போலி ரூபாய் நோட்டுக்களின் புழக்கத்தைக் கட்டுப்படுத்த மாநில அரசுகளின் உளவுப் பிரிவுகளின்உதவியை சிபிஐ நாடியுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X