கடற்படை ஹெலிகாப்டர் விழுந்து 4 பேர் பலி
டெல்லி:
இந்திய கடற்படையின் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் அதில் பயணம் செய்த 4 வீரர்கள் பலியாகிவிட்டதாகத்தெரிகிறது.
கர்நாடக மாநிலம் பெல்காம் அருகே மலைப் பகுதியில் இந்த விபத்து நடந்தது. கமோவ்-28 என்ற நீர்மூழ்கிகளைத் தாக்கிஅழிக்கும் திறன் கொண்ட இந்த ஹெலிகாப்டர் பகல் 12 மணியளவில் மோசமான வானிலை காரணமாக விழுந்து நொறுங்கியது.கோவாவில் இருந்து காலை 11.50 மணிக்கு அந்த ஹெலிகாப்டர் கிளம்பியது. ஹைதராபாத் வழியாக விசாகபட்டிணம்கடற்படைத் தளத்துக்கு சென்று கொண்டிருந்த அந்த ஹெலிகாப்டரில் 6 வீரர்கள் இருந்தனர்.
10 நிமிடம் பயணம் செய்த நிலையில் பெல்காமின் கானாபூர் மலைப் பிரதேசத்தில் அந்த ஹெலிகாப்டர் தரையில் விழுந்துநொறுங்கியது. இந்த விபத்தில் அதில் பயணம் செய்த 4 வீரர்கள் பலியாகிவிட்டனர். இருவர் பலத்த காயங்களுடன் உயிர்தப்பியுள்ளனர்.
உயிர் தப்பியவர்கள் செல்போன் மூலம் அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு விபத்து குறித்த தகவலைத் தெரிவித்தனர்.இதையடுத்து சம்பவ இடத்துக்கு கடற்படை ஹெலிகாப்டர்கள் விரைந்தன.
ஆனால், கடும் மழை பெய்து வருவதால் அந்த ஹெலிகாடர்களால் சம்பவ இடத்தில் தரையிறங்க முடியவில்லை.












Click it and Unblock the Notifications