ஐடியல் சுப்பிரமணியத்தின் கூட்டாளி சரண்
தேனி:
மோசடி மன்னன் ஐடியல் சுப்பிரமணியத்தின் நெருங்கிய கூட்டாளிகளில் ஒருவரான முத்துக்கிருஷ்ணன், தேனி மாவட்டம்உத்தமபாளையம் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
மோசடி மன்னன் ஐடியல் சுப்ரமணியத்தைக் கைது செய்த போலீஸார் வத்தலகுண்டு, கொடைக்கானல், விராலிப்பட்டி ஆகியஊர்களுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.அப்போது கொடைக்கானலில் அவருக்கு பங்களாக்கள் இருப்பதும், கொடைக்கானலுக்கு சூட்டிங்குக்கு வரும் நடிகைகளுக்குஇவர் விருந்து கொடுத்து கவனித்து அனுப்பியது போன்ற பல தகவல்கள் கிடைத்தன.
மேலும் ஐடியலின் கூட்டாளிகளைப் பிடித்தால் மேலும் இவரது பல மோசடிகள் வெளியில் வரும் என்று கருதப்படுவதால்அவர்களுக்கும் போலீசார் வலை வீசினர். இதில் அவரது இரண்டு கூட்டாளிகளும் சிக்கினர். அவர்களிடம் விசாரணை நடந்துவருகிறது.
மற்ற கூட்டாளிகளையும் போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந் நிலையில் ஐடியலுக்கு மிகவும் நெருங்கியவராக இருந்தபெரியகுளத்தைச் சேர்ந்த முத்துக்கிருஷ்ணன் என்பவர் இன்று உத்தமபாளையம் நீதிமன்றத்தில் தானாகவே சரணடைந்துள்ளார்.
ஐடியலின் பல்வேறு மோசடி வேலைகளுக்கு இவர் உடந்தையாக இருந்து வந்துள்ளார். கிட்டத்தட்ட ஐடியலின் ஏஜென்டு போலசெயல்பட்டு வந்தார்.
சரணடைந்த முத்துக்கிருஷ்ணனை நீதிபதி கருணாமூர்த்தி வரும் 24ம் தேதி வரை மதுரை மத்திய சிறையில் அடைக்கஉத்தரவிட்டார். இதையடுத்து முத்துக்கிருஷ்ணன் மதுரை கொண்டு செல்லப்பட்டார்.












Click it and Unblock the Notifications